அம்பாலா: 5 ரபேல் போர் விமானங்கள், இன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்பட்டன.

அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் அதற்கான இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகித்தனர். முதலில் விமானங்களுக்கு, அனைத்து மத சார்பிலான பூஜை நடைபெற்றது. பிறகு,  விமானப்படை வீரர்களின் சாகசம் நடைபெற்றது.

அதன் பிறகு ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி வந்த பிரான்ஸ் அமைச்சர் புளோரன்சுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவரும், பாதுகாப்பு அமைச்சரும் விமானம் மூலம் அம்பாலா சென்றடைந்தனர்.

கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியா வந்து சேர்ந்தன. 4 ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.