டில்லி:

சர்வதேச அளவில் இந்தியா பின் தங்க உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரசேதம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்கள் தான் காரணம் என்று நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில் அமிதாப் கந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் தொடர்ந்து முன்னேறுகின்றன. கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின் தங்ககின்றன. சர்வதே அளவில் சமூக முன்னேற்றத்தில் இந்தியா பின் தங்க பீகார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தான் காரணம்.

தொழில்கள் முன்னேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் பின்தங்கியுள்ளோம். 188 நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா பின் தங்கி இருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன் மோசமான நிலையில் உள்ளது. 5வது வகுப்பு மாணவனால் 2ம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துளளது’’ என்றார்.