காந்தஹார்:

ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணம் மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பகுதியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 5 தொழிலாளர்களை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தவர். மேலும், ஒரு தொழிலாளியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.