டெல்லி: ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டு  50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது  என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. நாளை (16ந்தேதி) நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், தற்போது  ஓபிசி இடஒதுக்கீடு வழங்கினால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்  என விளக்கம் தெரிவித்து உள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,   மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டில்  50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என  தெரிவித்தது. மேலும், தெரிவிக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காலஅவகாசம்  தேவைப்படுவதாகவும், நாளை  நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், தற்போது இட ஒதுக்கீடு வழங்கினால், அது  குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.