டெல்லி: இந்தாண்டு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு சலுகை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதை எதிர்த்து, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இந்த வழக்கில்  50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், தமிழக அரசின் அரசாணைக்கு மத்தியஅரசு அனுமதி வழங்க மறுத்தது. நடப்பாண்டி 50சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தமுடியாது என திட்டவட்டமாக மறுத்தது. இதை எதிர்த்து,  மத்திய அரசு மற்றும் சில மருத்துவர்கள் சார்பில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்ய கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டே, மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,   மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டில்  50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என  தெரிவித்தது. மேலும்  இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காலஅவகாசம்  தேவைப்படுவதாகவும், நாளை  நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால்,, தற்போது இட ஒதுக்கீடு வழங்கினால், அது  குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. அதைத்தொடந்து வழக்க விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு சலுகை வழங்க முடியாது என்று கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.