கோவா:

கோவாவின் சதா துணை சிறைச்சாலையில் சுமார் 45 கைதிகள் தப்ப ஓடிவிட்டதாக  அதிர்ச்சி தகவல் பரவியது. இதை  அம்மாநில சிறைத்துறை மறுத்துள்ளது.

கோவாவின் சதா துணை சிறைச்சாலையில் பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இநந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி  ஜெயிலரை தாக்கிவிட்டு, கலவரத்தை தூண்டிவிட்டு 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்துவிட்டதாக தகவல் பரவியது.

“சதா சிறையில் பராமரிப்பு பணிகள் நடப்பதும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சிறைக்கைதிகள் ஜெயிலரை தாக்கியதும் தப்பிக்க முயற்சித்ததும் உண்மைதான். ஆனால் அவர்கள் தப்பிக்க எடுத்து முயற்சியை சிறைக் காவலர்கள் தடுத்துவிட்டனர்” என்று அம்மாநில சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.