சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,000த்தை கடந்து இருக்கிறது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மேலும் 6037 பேர் குணமடைந்தனர். தலைநகர் சென்னையில் இன்று 976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒட்டு மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,041 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று உயிரிழந்தவர்களில் 80 பேர் அரசு மருத்துவமனையிலும், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.