சென்னை:

ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் இதன் மூலம் பயன்பெறும். மொத்த அரிசியையும் வழங்க கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு, ரூ.12.97 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.