டெல்லி: நடிகர் ரஜினிகாந்தின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு ‘தாதாசாகெப் பால்கே’ விருது  வழங்கப்படுகிறது என  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார்.

51வது தாதா பால்கே சாகிப் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்துக்கு தாதா பால்கே சாகிப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது,  திரைத்துறையில் ரஜினியின் சாதனைகளை பாராட்டும் விதமாக அவருக்கு மத்தியஅரசு அறிவித்துள்ளது.