மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வர்த்தக நகரான மும்பையில் 167 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சிவசேனா நிர்வாகியும், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சுகாதாரக்குழு உறுப்பினருமான அமே கோல் தகவல் தெரிவித்தார்.

53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் பலர் உள்ளனர். மும்பையில் 2,700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,200 ஆக உள்ளது. மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 223 ஆகும்.  507 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.