சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பள்ளி விடுதி ஒன்றியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இந்தாண்டு தொடக்கும் முதல் இயங்கி வருகிறது. இந் நிலையில் அரியானாவின் கர்னாலில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் 54 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி யோகேஷ் குமார் சர்மா கூறியதாவது:  கர்னாலில் ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 54 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு உடனடியாக சென்று, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளோம். அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தி வருகிறோம் என்றார்.