சென்னை:
மிழகத்தில் இன்று புதியதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டஅளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  மொத்த எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி,  தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 943 ஆக உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கும், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 76 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்று மட்டும் தென்காசியில் 5 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

மாவட்டம்  வாரியாக பாதிப்பு நிலவரம்: (இன்று மட்டும் – 76)

1) சென்னை – 358 (இன்று 55)

2) கோவை – 134 (இன்று 1)

3) திருப்பூா் – 109

4) திண்டுக்கல் -76

5) ஈரோடு -70

6) திருநெல்வேலி – 62

7) செங்கல்பட்டு – 56 (இன்று 3)

8) நாமக்கல் – 51(இன்று 1)

9) திருச்சி -50

10) தஞ்சாவூர் -49 (இன்று 3)

11) திருவள்ளூர்-48

12)மதுரை -46

13) நாகப்பட்டினம் -44

14) தேனி – 43

15) கரூர் – 42

16) விழுப்புரம் – 40 (இன்று 4)

17) ராணிப்பேட்டை -39

18) தென்காசி -31 (இன்று 5)

19) திருவாரூர் -28 (இன்று 1)

20)தூத்துக்குடி – 27

21) கடலூர் -26

22) சேலம் -24

23) வேலூர் -22

24) விருதுநகா் – 19

25) திருப்பத்தூா் -17

26) கன்னியாகுமரி -16

27) சிவகங்கை -12

28) திருவண்ணாமலை – 12

29) ராமநாதபுரம் -11

30) காஞ்சிபுரம் -10 (இன்று 1)

31) நீலகிரி – 9

32) கள்ளக்குறிச்சி -5 (இன்று 2)

33) பெரம்பலூர் -5

34) அரியலூர் -4

35) புதுக்கோட்டை -1

மொத்தம் -1596