சென்னை: மும்பை அணி நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்க‍ை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி, வலுவான நிலையில் காணப்படுகிறது.

அந்த அணி, 12 ஓவர்களில், 97 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. துவக்க வீரர் நிதிஷ் ரானா 37 பந்துகளில் 45 ரன்கள் அடித்து இன்னும் களத்தில் உள்ளார். அவர் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

ஷப்மன் கில் 24 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 5 ரன்களுக்கு அவுட்டானார். தற்போது, ரானாவுடன் களத்தில் இருப்பவர் கேப்டன் இயன் மார்கன்.

மும்பை அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால், கொல்கத்தா அணி, அதிகம் பதற்றமடையாமல், சிறியளவிலான அதிரடியை மட்டுமே வெளிப்படுத்தி ஆடிவருகிறது. அதேசமயம், யாரும் பந்துகளை வீணாக்கவும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போதைய நிலையில், அந்த அணி 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தாலே வெற்றி பெறலாம் என்ற நிலை உள்ளது.