டில்லி:

58 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் மார்ச் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது..

தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி பதவி ஏப்ரல்,- மே மாதங்களில் காலியாகிறது. இந்த பதவிகளுக்கு மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும்’’ என்றார்.

உ.பி.யில் அதிகபட்சமாக 10 இடங்கள், பீகார், மகராஷ்டிரா 6 இடங்கள், மேற்குவங்கம், மத்தியபிரதேசம் தலா 5 இடங்கள், கர்நாடகா, குஜராத்தில் தலா 4 இடங்கள் காலியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.