சென்னை:
மிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக  580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை  5,409ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு   5000 கடந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை  நேற்று 4,829ல் இருந்தது. இன்று மேலும் 580 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து  5,409ஆக உயர்ந்துள்ளது.  இந்த 580 பேரில்,  316 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஆண்கள் 410 பேர் பெண்கள் 170 பேர்.
அதுபோல இன்று 2 பேர் பலியானதைத் தொடர்ந்து பலிஎண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி இன்று 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை  1547 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,
 இன்று 14, 102 பேர்களுக்கு என்று பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துஉள்ளது.
இன்றைய பாதிப்பில் 316 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். திருவள்ளூரில் 63 பேரும், விழுப்புரத்தில் 45 பேரும், அரியலூரில் 24 பேரும் ,கடலூரில் 32 பேரும்,  பெரம்பலூரில் 33 நபர்களும் இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.