மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,902 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இதையடுத்து ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 16,66,668 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 156 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஆகையால் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 43,710 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 1,27,603 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக 14,94,809 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.