சென்னை:
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் மாலை 5 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடை பெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 76.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குனேரி தொகுதியில்மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.