மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இன்று அதிகாலை  6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை இந்திய நேரப்படி சுமார் 5.30 மணி அளவில்,  மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது   ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக அந்நாட்டு  தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி மணிலாவிலிருந்து 451 கி.மீ. தென்கிழக்கில் இருந்ததாகவும், கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியதாகவும்  கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் காரணமாக,  வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் அலடியடிறத்துக்கொண்டு வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.