டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி வருகிறது.  உலக அளவில் 3வது இடத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆக உயர்நதுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6லட்சத்து 97ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2லட்சத்து 53ஆயிரத்து 162 ஆக உள்ளது. இதுவரை 4 லட்சத்து 24ஆயிரத்து 891 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். அதே வேளையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 19ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த பாதிப்பில் 78 சதவிகித பாதிப்பு  மகாராஷ்டிரம் தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே. மீதமுள்ள 22 சதவிகித பாதிப்பு மற்ற மாநிலங்களில் உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில்  7,074 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  அங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் படி, கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா முந்தி உள்ளது.
ரஷியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்றிய நிலவரப்படி 6 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும்,  பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும்  உள்ளன.