நியூயார்க்: ஐ.நா. உறுதிமொழி வரைவு வாசகத்தில் இடம்பெற்ற ஒரு வாசகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் திருத்தம் செய்ய வேண்டுமென கூறியுள்ளன இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள்.

ஐ.நா. அவையின் 75வது நிறைவு ஆண்டையொட்டி, புதிய உறுதிமொழி வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த உறுதிமொழிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதபட்சத்தில், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும் என்று ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த உறுதிமொழியின் இறுதியில், “சிறந்த எதிர்காலம் என்ற நமது பொதுவான எண்ணத்தை அடைய இணைந்து செயல்படுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வாசகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள், இதை ஐ.நா. அவை விதிகளின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளதுபோல், “சிறந்த எதிர்காலம் என்ற பொதுவான எண்ணத்தை அடைய இணைந்து செயல்படுவோம்” என மாற்ற வேண்டுமாய் வலியுறுத்தியுள்ளன.

ஏனெனில், முதலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிமொழியில் உள்ள வாசகத்தை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 6 நாடுகளும், சீனாவுடன் ஏதோவொரு வகையில் பிரச்சினை உள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.