சென்னை:

திருவள்ளூரில் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவள்ளூரில் உள்ள  பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது.  இந்த கொள்ளையில் சுமார் ரூபாய்  6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்யைடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

திருவள்ளுர் மாவட்ட கோர்ட்டுகள் அமைந்துள்ள  ஆயில் மில் பகுதியிலுள்ள பாங்க் ஆப் இந்தியா  வங்கியில், பொதுமக்கள் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை போயுள்ளதாக ன காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

இன்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை நடைபெற்றிருப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, காவல்ர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் வல்லுநர்களும் வங்கி வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளையில் சுமார் 30 கிலோ அளவிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.