கொரோனாவுக்கு இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள்- 4 எம்.பி.க்கள் உயிர் இழந்த சோகம்..

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி நேற்று மரணம் அடைந்தார்.

கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் உயிர் இழப்பது இதுவே முதல் முறை.

கர்நாடக மாநில பா.ஜ.க.வில் முக்கிய தலைவராகத் திகழ்ந்த, சுரேஷ் அங்கடி, நான்கு  முறை எம்.பி.யாக இருந்தவர்.

எடியூரப்பாவுக்குப் பதிலாக, கர்நாடகத்தில் சுரேஷ் அங்கடியை  முதல்-அமைச்சராக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

கொரோனாவுக்கு ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார், திருப்பதி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. பிரசாத் ராவ் மற்றும் கர்நாடக மாநிலங்களவை எம்.பி. அசோக் கஸ்தி ஆகியோர் மரணம் அடைந்துள்ள நிலையில், அந்த கொடிய வைரசுக்கு உயிர் இழந்துள்ள நான்காவது எம்.பி. சுரேஷ் அங்கடி ஆவார்.

கொரோனாவுக்கு ஏற்கனவே , தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 -பா.பாரதி.