சென்னை:
போக்குவரத்து விதியை மீறியதாக மொபைல் ஆப் மூலம் உணவு விநியோகிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது சென்னை போக்குவரத்து போலீஸார் 616 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.


உணவுகளை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக, விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதாக புகார் வந்தது. இதையடுத்து சென்னை போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது போக்குவரத்து விதியை மீறி இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த 616 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.