சென்னை:
மிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646  பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  மொத்த பாதிப்பு 17,728 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளான 646  பேரில் 509 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 11,640 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு   127 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.71% ஆக உள்ளது.
இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,342 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் மொத்தம் 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 9,677 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,12,357 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 35 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும், தெலுங்கானாவில் இருந்து வந்த 3 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 6 பேருக்கும், உத்திரப்பிரதேசத்தில் 2 பேருக்கும், டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் துபாயில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 52.69% ஆக உள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11,217 ஆண்கள், 6,506 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.