திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 6,591 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதிதாக 6,591 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 3,53,473 ஆக உள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 24 பேர் உயிரிழக்க மொத்த பலியின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 7,375 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ஒட்டு மொத்த எண்ணிக்கை 2,60,243 ஆக உள்ளது. தற்போது 91,922 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.