சென்னை :

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் வாடிய 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து வரும் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைகாலம் நிறைவுசெய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன்விடுதலை செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.