சென்னை:

சென்னையில் சமீபகாலமாக கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ரவுடிகள் மற்றும் கூலிக்காக கொலை செய்யும் கூலிப்பட்டாளங்களும் அதிகரித்து உள்ளன.

இந்நிலையில், பிரபல ரவுடி ஒருவரின் பிறந்த நாள் விழாவில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள ரவுடிகள் கலந்துகொள்ள தாம்பரம் அருகே உள்ள ஒரு பொழுதுபோக்கு இடத்தில் கூட  இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய ஆயத்தமான போலீசார், முக்கியமான இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த அதிரடி சோதனையின்போது, நள்ளிரவில் அந்த வழியாக வந்த 69 ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான வீச்சரிவாள்கள், வெட்டுக்கத்திகள், 30க்கும் மேற்பட்ட கத்திகள், 40க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள்  உள்பட 8 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ரவுடிகள் ரகசிய இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.