ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அமர்நாத் யாத்திரையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரின் ஆனநாத் நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எ