ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் பலியானார்கள்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதியில் இருந்து  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காஷ்மீரின் ஆனநாத் நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகள்கள் சென்ற பேருந்து பயங்கரவாதிகள்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பேருந்தில் பயணித்த 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் படு காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டவுடன்,  அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பரஸ்பரம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில்  3 காவலர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.