சென்னை: நாட்டின் 74-ஆவது சுதந்திர தினத்தையொட்டிமுதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியேற்றினார். காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவில்  உரையாற்றினார்.

நாட்டின் 74வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய நிலையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றினார்.

கால 8.30 மணி அளவில் கோட்டைக்கு வந்த முதல்வருக்கு முப்படைகளின் அணிவகுப்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கொந்தளம் சென்ற முதல்வர் சரியாக 8.45 மணி அளவில் கொடியேற்றி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முப்படை தளபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.

இந்த விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளவர்கள் அமர சமூக இடைவெளியை விட்டு இருக்கைகள் அமைக்கப்ட்டுள்ளது.