ராமேசுவரம்:
லங்கை சிறைகளில் உள்ள  தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள்  அனைவரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
cylon
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க  கோரி கடிதம் ம\மூலம் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்.
இதையடுத்து மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் கடிதம் மூலம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்த ராமேசுவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 43 மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 43 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் நீர்க்கொழும்பு சிறையில் இருந்த பாம்பன் மீனவர்கள் 6 பேர் கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் வவுனியா சிறையில் உள்ள 28 மீனவர்கள் இன்று (26-ந் தேதி) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட உள்ளனர். ஆனால் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 102 படகுகளை விடுவிக்க உத்தரவிடப்படவில்லை.
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரும் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள்.