குளச்சல்

குளச்சல் பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ தம்பதியரின் 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா மற்றும் புஷ்பவல்லி தம்பதியர் நரிக்குறவர் வகுப்பை சேர்ந்தவர்கள். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள குளச்சல் பகுதியில் இருவரும் சென்று தேன் மற்றும் பாசி மணி மாலைகள் விற்றுள்ளனர்.  இவர்களுடன் இவர்களது 8 மாத பெண் குழந்தையையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

நேற்றிரவு இருவரும் குழந்தையுடன் குளச்சல் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி உள்ளனர்.  அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்த 8 மாத பெண் குழந்தையை யாரோ கடத்திச் சென்றுள்ளனர்.   நரிக்குறவர் தம்பதியர அதிர்ச்சி அடைந்து குளச்சல் காவல்நிலையத்தில் புகார அளித்துள்ளனர்.  காவல்துறையினர் பேருந்து நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது பேருந்து நிலைய சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் கோரிய போது அங்கு மின்  இணைப்பு இல்லாததால் எந்த ஒரு சிசிடிவியும் உபயோகத்தில் இல்லாதது தெரிய வந்துள்ளது.   எனவே அங்குள்ள தனியார் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கேட்டு வாங்கிய காவல்துறையினர் அவற்றைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.