நியூயார்க்:

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.


அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் தனித்தனியாக உள்ள வீடுகளில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் துணை ஷெரீப் உள்பட 8 பேர் பலியாயினர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.