சென்னை: நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில்,   இன்று ஒரே நாளில் 84ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16ந்தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடும் பணி தொடங்கிய நிலையில், இன்று 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 28 நாள்கள் கழித்து இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி இன்று 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 6 மணி  நிலவரப்படி,  84 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.