புதுடெல்லி:

சிபிஐ புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷிகுமார் சுக்லாவுக்கு ஊழல் வழக்குகளை விசாரித்த அனுபவம் கிடையாது என  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு பதவியில் இருந்து நீக்கியது.
இதனையடுத்து தற்காலிக இயக்குனராக நாகேஸ்வரராவை மத்திய அரசு நியமித்தது.

முக்கிய பதவிக்கு நிரந்தரமாக சிபிஐ இயக்குனரை நியமிக்காதது ஏன் என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி   எழுப்பியது.இதனையடுத்து, ரிஷிகுமார் சுக்லாவை உயர்மட்ட குழு நியமித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்ட ரிஷிகுமார்
சுக்லாவுக்கு ஊழல் வழக்குகளை விசாரித்த அனுபவம் இல்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.