இட்டாநகர்:

அருணாசல பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 88 மாணவிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியைகள் தண்டனை வழங்கியுள்ளனர்.

அருணாசல பிரதேசம் பபும் பேரே மாவட்டம் தனிகப்பாவில் உள்ளது கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 23ம் தேதி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவி இருவரை தொடர்புபடுத்தி ஆபாச கடிதம் எழுதியதாக புகார் எழுந்தது. பள்ளியை சேர்ந்த 6- மற்றும் 7ம் வகுப்பு மாணவிகள் தான் இந்த கடிதத்தை எழுதியதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து 3 ஆசிரியர்கள் 6 மற்றும் 7ம் வகுப்பை சேர்ந்த 88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி தண்டனை வழங்கினர். 2 உதவி ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஜூனியர் ஆசிரியர் சேர்ந்து 88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஒரு மாணவியிடம் இருந்து அந்த ஆபாச கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த விவகாரம் கடந்த 27ம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்து சாகேலி மாணவர் ஒன்றியத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் உள்ளூர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.