சென்னை: தமிழகத்தில் 9% கொரோனா தடுப்பூசி வீணானதற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் அலட்சியமா அல்லது தடுப்பூசி திருடப்பட்டதா என்று  சமூக வலைதளங் களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆ ட்சி அமைந்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் இருந்து வருகிறார். கொரோனா தீவிர பரவலுக்கு இடையே ஆட்சியை கைப்பற்றியுள்ள ஸ்டாலின், தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி விநியோகம் மற்றும் அதை செலுத்துவதில்,  அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் பலருக்கு சரியான புரிதல் இல்லை என்றும்,  தடுப்பூசி குப்பியில் இருந்து தேவையான மருந்தினை எடுக்க போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்றும், அதன் காரணமாகவே தடுப்பு மருந்துகள் விரையம் ஆகுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் முதல்நாள் தடுப்பூசி போட்ட அன்றே  192 தடுப்பூசி டோஸ்கள் வீணடிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியா தடுப்பூசி போடத் தொடங்கியபோது, முதல் இரண்டு வாரங்களில், 18-19 சதவீத தடுப்பு மருந்துகள் வீணானது. பின்னர், அவை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதுதொடர்பாக  கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தகவலின்படி,  தமிழ்நாடு 3.7% வீணடித்ததாக கூறப்பட்டது. இந்த பட்டியலில் தமிழ்நாடு குறைந்த அளவிலான தடுப்பு மருந்துகளையே வீணடித்துள்ளதாக கூறப்பட்டது. பின்னர், தமிழகத்தில் தடுப்பூசி விரயம் அதிகரித்ததாக கூறப்பட்டது.  ஏப்ரல் இறுதி நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும் சுமார்  9% கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தடுப்பூசி  பயன்படுத்தப்படும் கோவிஷில்டு தடுப்பூசி குப்பிகளில் தலா 0.5 மில்லியில் மொத்தம் 10 குப்பிகள் உள்ளன. இதேபோன்று கோவாக்சின் தடுப்பூசியில் தலா 0.5 மில்லி அளவில் மொத்தம் 20 டோஸ்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் திறக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும், இல்லையென்றால் வீணாகி விடும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி விரையத்துக்கு காரணம்  Epiry date  முடிந்துவிட்டதால் வீணானது என்ற தகவல்கள் பரவின.  மேலும், சரியான முறையில், பாதுகாக்க தவறியதால்தான் தடுப்பூசி விரயம் எனறும், அதற்கு காரணம் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகிறது.  தடுப்பூசி expiry date தாண்டியது என்று பொய் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், தடுப்பூசிகளின் shelf life 6 மாதங்கள். ஆகவே வீணாக போனது முறையான storage வசதி செய்யாததால்தான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இல்லையேல்,   தடுப்பூசிகளை  அதிகாரிகள் துணையுடன் ஆட்சியாளர்கள்  கள்ளச்சந்தையில் விற்பனை செய்திருக்கலாம்  என்ற கருத்தும் உலவி வருகின்றன.

தடுப்பூசி செலுத்துவதில் செவிலியர்கள், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் முறையான பயிற்சி பெறாதவர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாலும்  தடுப்பூசி விரயம் ஆனதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் 9 சதவிகித தடுப்பூசி வீணானதற்கு முக்கிய காரணம், முன்னாள் சுகாதாரதுதுறை விஜயபாஸ்கரின் அலட்சியம் என்றே கூறப்படுகிறது.  தடுப்பூசி உண்மையில் வீணானதா? அல்லது அமைச்சரால் கள்ள சந்தையில் விற்கப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…