திருவள்ளூர்

ரு லாரி மோதி ஒன்பது பசுமாடுகள் திருவள்ளூர் அருகே மரணம் அடைந்துள்ளன.

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு கிராமம் மப்பேடு.   அரக்கோணத்தில் இருந்து மப்பேடு வழியாக வந்துக் கொண்டிருந்த ஒரு லாரியில் முழுவதுமாக கரிமூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன.    மப்பேடு கிராமம் வந்த போது அந்த லாரி ஓட்டுனர் கருப்பண்ணன் என்பவரின் கட்டுப்பட்டை இழந்து உள்ளது.

சாலையிலிருந்து விலகி சாலையோரம் படுத்திருந்த பசு மாடுகள் மீது லாரி ஏறியது.   அந்த விபத்தில் 9 மாடுகளும் அதே இடத்தில் உயிரிழந்தன.    இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் ஓட்டுனர் கருப்பண்ணனை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.