சென்னை:

9நிமிடம் விளக்குகள் அணைக்கப்பட்டதால், சுமார் 2, 200 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், 9 நிமிடங்கள் மின்விளக்கை அனைத்து விட்டு, அகல்விளக்கு ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று இரவு பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகள் அனைக்கப்பட்டு, அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. தமிழகத்திலும் பல இடங்களில் மின்விளக்குகள் அனைக்கப்பட்டது.

இன்று காலை  அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தங்கமணி ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,.  9 நிமிடங்கள் மின்சாரம் அனைக்கப்பட்டதால், தமிழகத்தில் நேற்றிரவு 2, 200 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்தது என்று கூறினார்,

மேலும், எந்த இடத்திலும் எங்கேயும் பிரச்சனை ஏற்படாமல் மின்சார வாரியம் சரியாக பணியாற்றியதால் தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையும்  இல்லை என்றும் கூறினார்.