டில்லி:

நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பல தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, தங்களது ஜனநாயக உரிமையை செலுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்த நிலையில், இன்று  4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

4வது கட்ட தேர்தல் பீகார், ஜம்முகாஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஆகிய 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

71 தொகுதிகளில் சுமார்  943 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர்.  வாக்குப்பதிவுக்காக சுமார் ஒரு லட்சத்து 40ஆயிரம்  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்றைய (4வது கட்டம்) தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

முன்னதாக நேற்று முதல் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.