சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  11ஆம் வகுப்பு (பிளஸ்-1)  பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் தெரிய வந்துள்ளது. அதுபோல தேர்வு எழுதிய அரசு பள்ளிகளில் 90.6 சதவிகித பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

இந்த கல்வி ஆண்டில்  8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களின்  93.3% மாணவர்களும் , 96.5% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 95% பேர் தேர்ச்சி அடைந்து உடைந்துள்ளனர்.

மாநில அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.9% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும்,  97.6% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2,636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி  விகிதம்:

அரசுப்பள்ளிகள்- 90.6%

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் – 96.9%

மெட்ரிக் பள்ளிகள்- 99.1%

இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்-96.8%

பெண்கள் பள்ளிகள்- 96.8%

ஆண்கள் பள்ளிகள்- 90.2% 

பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி  விகிதம் 

அறிவியல் பாடப்பிரிவுகள் – 93.9%

வணிகவியல் பாடப்பிரிவுகள்- 97.4%

கலைப்பிரிவுகள் – 95.1% 

தொழிற்பாடப்பிரிவுகள்- 92.3%.

பாடங்கள் வாரியாக தேர்ச்சி  விகிதம் 

இயற்பியல் – 94.6%

வேதியியல்- 95.7%

உயிரியல் – 97.1%

கணிதம் – 96.9%

தாவரவியல் – 91.1%

விலங்கியல்- 93%

கணினி அறிவியல் – 98.2%

வணிகவியல்- 97.7%

கணக்குப்பதிவியல் – 97.7%

இவ்வாறு அரசு தேர்வுகள் துறை தெரிவித்து உள்ளது.