மெக்சிகோ:

மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் அருகே ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் குயாடலூப் பலேசியஸ். 96 வயதாகும் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை.

விவசாய வேலை செய்து வளர்ந்த திருமணம் செய்து கொண்டு 6 குழந்தைகளுக்கு தாயானார். ஓய்வில் இருக்கும் இவர் தற்போது கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்பட்டு பள்ளிக்கு சென்று வருகிறார். முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் 2015-ம் ஆண்டில் தொடக்க கல்வி பயில தொடங்கிய இவர் தற்போது நடுநிலை கல்வியை படித்து முடித்துள்ளார்.

இப்போது இவருக்கு நன்றாக எழுதபடிக்க தெரிகிறது. இது குறித்து அவர் கூறுகையில், ‘‘எனது காதலர்களுக்கு காதல் கடிதம் எழுத வேண்டும் என்ற ஆசையில் எழுத, படிக்க தொடங்கினேன். தற்போது என்னால் காதல் கடிதங்கள் எழுத முடிகிறது’’ என்றார்.