அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந் நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில்  கொரோனாவுக்கு மட்டும் 88 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,820 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரேநாளில் 9,211 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஆகையால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,18,311 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 85,130 பேர் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.