லையாளத்தில் ஹீரோயின், கவர்ச்சி வேடங்களில் நடிப்பவர் நடிகை அபர்ணா நாயர். தமிழில் ’எதுவும் நடக்கும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். 2 வாரத்துக்கு முன்பு இவரை நெட்டிஸன் ஒருவர் கெட்டவார்த்தையில் திட்டி ஆபாசமாக மெசேஜ் போட்டார். அந்த நபரைப் பற்றி புகைபடத்துடன் நெட்டில் மெசேஜ் வெளியிட்டார் அபர்ணா. பின்னர் இதுகுறித்து கேரள சைபர் கிரைம் போலிசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.


இதுகுறித்து அபர்ணா நாயர் கூறும்போது.’ அஜீத்குமார் என்ற நபர் என்னிடம் தவறாக பேசினார். இதுபற்றி போலீசில் பகார் செய்தபோது அவரை அழைத்து விசாரித் தனர். அன்றைய தினம் நானும் போலீஸ் நிலையம் சென்றேன். அஜீத்குமார் தவறாக என்னைப்பற்றி எழுதியதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார். அவரது குடும்ப சூழலை எண்ணி புகாரை வாபஸ் பெற்றேன். இனிமேல் இதுபோல் என்னிடமோ மற்ற எந்த பெண்ணிடமும் நடந்துகொள்ளமாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். இந்த விஷயத்தில் போலீசார் தக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு அபர்ணா நாயர் கூறினார்.