ரோஜா கூட்டம். சில்லுனு ஒரு காதல், கொலையுதிர் காலம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூமிகா. தோனி வாழ்க்கை கதையில் சுஷாந்த்தின் அக்காவாக நடித்திருந்தார்.


சுஷாந்த் மறைந்து ஒரு வாரத்துக்கு பிறகு இரங்கல் தெரிவித்திருக்கும் பூமிகா,’டியர் சுஷாந்த் நீ எங்கிருந்தாலும் இப்போது கடவுளின் குழந்தை. உன்னுடைய மரணத்துக்கான ரகசியம் உன்னுடைய இதயத்திலும் சிந்தனையிலும் எரிந்துவிட்டது. இந்த மரணத்தால் பாதிக்கப்பட்டி ருக்கும் அனைவரும் பிரர்த்தனையில் உங்கள் மனங்களை செலுத்துங்கள். உங்கள் மீதும் உங்களை சுற்றி உள்ளவர்கள் மீதும் அக்கறை கொள்ளுங்கள். இதற்காக யாரை குறை சொல்வது. திரைத துறையையா அல்லது உறவையா? இறந்த ஆத்மாவுக்கு மரியாதை கொடுங்கள். இதுபற்றி மக்கள் அரங்கில் பேசவிட்டு வேடிக்கை பார்க்காமல் திரையுலகினர் இப்பிரச்னையை பேசி முடிவு காண வேண்டும்’ என்றார்.