சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருதால், அணையின் நீர்மட்டம் 100அடியை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலையில் 99.10 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்பட அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து, ஒகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

இந்த நிலையில், அணையின் நீர்மட்டம்  இருப்பு 99.10 அடியாக உள்ளது.  தற்போதைய நிலையில் அணையின் நீர்மட்டம் 63.68 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 34.366 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.