சென்னை:

ஈரோட்டை சேர்ந்த 16 வயது இனியன் பன்னீர்செல்வம் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.


5 வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்த இனியன் பன்னீர்செல்வம் உலக அளவிலான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.

அவருக்கு ட்விட்டரில் வாழ்த்தியுள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன், நீங்கள் பெற்ற வெற்றியால் ஆச்சரியப்பட்டுப் போனேன். நம்மில் இருக்கும் திறமைசாலிகள் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு மாதமும் நாம் கிராண்ட் மாஸ்டரை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் 5 முறை உலக செஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.