மிழ்த்திருநாட்டைப் பொறுத்தவரை அரசியல் வேறு திரைத்துறை வேறு அல்ல.  ஏராளமான நடிக நடிகையர் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போதும்கூட தேர்தல் நேரத்த்தில் நட்சத்திரப்பட்டாளங்கள் வாக்கு கேட்டு தமிழகம் முழுதும் சுற்றி வருவதைக் காண முடியும்.

இப்போது அஞ்சலியும் அரசியல் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.

ஜெய்யுடன் கிசுகிசுக்கப்படும் இவர், திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவார் என்று நினைத்தால் இப்போது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

“அரசியல் என்பது தனியான ஒன்றல்ல. அரசியல் இல்லாமல் நாம் யாருமே இல்லை. எல்லாவற்றையும் அரசியலே தீர்மானிக்கிறது” என்று தெளிவாகப் பேசும் அஞ்சலி, “ ‘‘எனக்கு அரசியல் ரொம்பப் பிடிக்கும்.  அரசியலை மிககவனத்துடன் நோக்குகிறேன்.” என்கிறார்.

“அரசியல் பிரவேசம் எப்போது, எந்த கட்சியில் சேருவீர்கள்” என்று கேட்டால் மட்டும் மர்மப் புன்னகையையே பதிலாகத் தருகிறார்.