சென்னை:

சென்னை சென்ட்ரலில் ரெயில்வே கோட்ட பொதுமேலாளர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வெளியூர் செல்லும் ரெயில் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில்  தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தின் 4 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அறையில் இருந்து கம்ப்யூட்டர் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள், ஆவனங்கள் எரிந்து சாம்பலாயின.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர்,  5 வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.