குடலில் காற்றைச் செலுத்தி சித்ரவதை செய்யப்பட்ட தொழிலாளி  உயிர் இழந்த பரிதாபம்..

 

மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த பெர்மானந்த் என்பவர் அங்குள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 8 ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர், தனது குவாரி உரிமையாளரிடம் சம்பளம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குவாரி உரிமையாளர்,, கூலித்தொழிலாளி பெர்மானந்தை அடித்துள்ளார்.

உச்ச கட்டமாக, தனது சகாக்கள் துணையோடு, பெர்மானந்த் மலக்குடலில், ’’கம்ப்ரெசர்’ மூலம் காற்றைச் செலுத்தி சித்ரவதை செய்துள்ளார்..

இதனால் மயங்கி விழுந்த அவரை குவாலியர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதனால் சிவபுரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பெர்மானந்த் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்து போனார்.

இந்த கோரச்சம்பவம் குறித்து பெர்மானந்த் சகோதரர் சிவபுரி போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-பா.பாரதி.